search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி பஸ் விபத்து"

    ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற மினி பஸ் இன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuSrinagar #Accident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.



    கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்துக்குள் விழுந்து, கவிழ்ந்தது. இந்த கோரவிபத்தில் 20 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #JammuSrinagar #Accident 
    மினி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மகுடஞ்சாவடி:

    திருவண்ணாமலையில் இருந்து பக்தர்கள் 27 பேர் நேற்று இரவு ஒரு மினி பஸ்சில் புறப்பட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி சந்தை அருகே மெயின் ரோட்டில் பஸ் வந்தபோது திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 46), சீனிவாசன் (35) மற்றும் இவரது மனைவி புஷ்பம்(28), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த அங்கமுத்து (55) உள்பட 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள், பஸ்சுக்குள் சிக்கிய அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 19 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மினி பஸ்சை மோதியிருப்பது தெரியவந்தது.

    மினி பஸ்சின் படிக்கட்டியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை, வல்லம் அருகே உள்ள நல்லதண்ணி கிணறு சாலையைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 30).

    இவர் கடந்த 12-ந் தேதி வல்லத்தில் இருந்து தஞ்சைக்கு மினி பஸ்சில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த படி சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே மினி பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ் பயணிகள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று இரவு இறந்தார்.

    இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேராவூரணி அருகே மினி பஸ்சில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.

    இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×